அகமதாபாத்: கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிவரும் பஞ்சாப் அணி, ரன்சேர்க்க திணறி வருகிறது. 12 ஓவர்களில், அந்த அணி 64 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. அதேசமயம், 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

கேப்டன் ராகுல் 19 ரன்களிலும், அகர்வால் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கிறிஸ்கெய்ல் டக்அவுட் ஆனார். ஹூடா 1 ரன்னில் அவுட். தற்போது பூரான் 18 ரன்களுடனும், ஹென்ரிக்யூஸ் 2 ரன்களிலும் ஆடிவருகின்றனர்.

கொல்கத்தா சார்பில் ஷிவம் மவி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சிறப்பாக பந்துவீசியுள்ளனர்.

இதேநிலை நீடித்தால், பஞ்சாப் அணி 120 ரன்களைக்கூட எட்டமுடியாது என்று கணிக்கப்படுகிறது. கிறிஸ் கெய்ல், பூரான் போன்றவர்கள், இத்தொடரில், தொடர்ந்து சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது.