புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டு, ஆளுநர் பொறுப்பு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முதலமைச்சர் நாராயணசாமி கடந்த 10ம் தேதி நேரில் சந்தித்தார்.

அப்போது துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும் என்று புகார் மனு அளித்தார். இந் நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி அப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.