புதுச்சேரி: 
ரலாற்றில் முதல்முறையாகப் புதுச்சேரி சட்டப்பேரவையில் தமிழில் ஆளுநர் உரையுடன் நாளை நிதிநிலை கூட்டத்தொடர் தொடங்குகிறது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நாளை காலை 9.30 மணிக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் உரையுடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பிற்பகலில் சட்டப்பேரவை துணைத் தலைவர் தேர்வும், மாலையில் நிதிநிலை அறிக்கை தாக்கலும் நடைபெற உள்ளன.
வரலாற்றில் முதல்முறையாகப் புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை தமிழில் இடம் பெறப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.