புதுச்சேரி

புதுச்சேரி மாநில 15 ஆம் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்குகிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தேர்தலும் நடந்தது.  இதில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக அணி பெரும்பான்மை இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்துள்ளது.  ஏன் ஆர் காங்கிரஸ் தலைவர் என் ரங்கசாமி முதல்வர் பதவி ஏற்றார்.

அதன் பிறகு பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் இடையே ஏற்பட்ட இழுபறி காரணமாக மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.  பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வம் சபாநாயகராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரி மாநில 15 ஆம் சட்டப்பேரவை முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்க உள்ளது.  கூட்டத்தில் சபாநாயகராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள பாஜக சட்டப்பேரவை செல்வம் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.  அவரது இருக்கையில் அவரை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அமர வைக்க உள்ளனர்.