ண்ட்லா

காங்கிரஸ் அளித்த உரிமைகள் பாஜக ஆட்சிக்கு வந்ததும் பறிக்கப்பட்டதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

அடுத்த மாதம் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மத்திய பிரதேசத்திற்கு நவம்பர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றன.  மத்திய பிரதேசத்தில் மண்ட்லா நகரில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கலந்து கொண்டு பேசினார்.

அவர் தனது உரையில்

“பா.ஜ.க. ஆட்சியில் 1.5 லட்சம் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் காணாமல் போயுள்ளனர் மத்தியப் பிரதேசத்திலேயே, அதிக அளவில் காணாமல் போகும் இளம்பெண்களின் எண்ணிக்கை பதிவாகிறது..  தினமும் மத்தியப் பிரதேசத்தில் தினமும் 17 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கின்றன. மேலும் பழங்குடியினர் மீது நடத்தப்படும் வன்முறைகளைக் கவனத்தில் கொள்ளும்போது, நாட்டில் மத்தியப் பிரதேசமே முன்னிலையில் உள்ளது 

உங்களுக்குக் காங்கிரஸ் அளித்த உரிமைகள், உங்களை அதிகாரமிக்கவர்களாக ஆக்க செய்த பணிகள் என அனைத்தும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் உங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு உள்ளன.  பஞ்சாயத்துத் தலைவர்களின் உரிமைகள் குறைக்கப்பட்டு உள்ளன. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் அமல்படுத்தப்படவில்லை. 

புலம்பெயர்தல் அதிகரித்து உள்ளது. ஏனெனில் கிராமங்களில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் இல்லை. உங்களுடைய நிலம் பறிக்கப்படுகின்றன.  உங்களுடைய உற்பத்திக்குச் சரியான விலை உங்களுக்குக் கொடுப்பதில்லை. நீங்கள் போராடும்போது, துப்பாக்கி குண்டுகள் உங்களை நோக்கிப் பாய்கின்றன” 

என குறிப்பிட்டுள்ளார்.