க்னோ

த்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலர் பதவியிலிருந்து பிரியங்கா காந்தி விலக உள்ளார்.

கர்நாடகாவில் கடந்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று காங்கிரஸ் கட்சி பாஜக-வை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றது. மேலும் வரவிருக்கும் தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற 5 மாநிலத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாகக் காங்கிரஸ் கட்சியில் சில மாற்றங்கள் வருவதாகத் தெரிகிறது.

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச் செயலராகப் பிரியங்கா காந்தி பணியாற்றி வருகிறார். தற்போது பிரியங்கா காந்தி அந்த பதவியிலிருந்து விலகப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குக் கட்சியில் முக்கியப் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.  வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவாரா? என்பது குறித்து காங்கிரஸ் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

ராகுல் காந்தி வயநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் அங்கு இடைத்தேர்தல் வரவிருக்கிறது. காங்கிரஸ் கட்சி அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளத் தீவிரம் காட்டி வருகிறது.  இங்கு போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர் குறித்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை.