பிளஸ் -2 தேர்வு எழுதிய ஆயுள் தண்டனை கைதியும், .  மகனும் ஒரே நேரத்தில் ‘’பாஸ்’..

திருநெல்வேலி  மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் சுகுமார்.

குடும்ப தகராற்றில் உறவினரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் முடிவுகள் வெளியான பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வைச் சிறையில் இருந்தவாறே அவர் எழுதி இருந்தார்.

320 மதிப்பெண்கள் பெற்று சுகுமார் இந்த பரீட்சையில் தேர்வாகியுள்ளார்.

இதே தேர்வை எழுதிய அவர் மகன் சுரேஷும் வெற்றி பெற்றுள்ளார்.

விக்ரமசிங்கபுரத்தில் உள்ள புனித மேரி பள்ளியில் படித்த சுரேஷ், 431 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் சுகுமார்  அனுபவித்த வேதனைகளுக்கு மேலும் ஒரு துயரமாக அவர் மனைவி கடந்த  2014 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

 இதனால், சுகுமாரின் தாய் வீட்டில் அவரது மகன் சுரேஷ் வளர்ந்து வருகிறான்.

இரட்டை துன்பம் அனுபவித்த சிறைக்கைதிக்கு , இந்த தேர்வு முடிவுகள்- இரட்டை சந்தோஷத்தை அளித்திருக்கும்.

-பா.பாரதி.