டிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள  கணவர் போனி, மகள் குஷி ஆகியோருடன் துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி, நேற்றிரவு 11 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார்.

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி ‘நடிகை ஸ்ரீதேவியின் மறைவு வருத்தமளிக்கிறது. இந்திய திரைத்துறையில் மூத்த நடிகையான ஸ்ரீதேவி பல சிறந்த கதாபத்திரங்களில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவை எப்போதும் மனதில் நிற்கும். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், “நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது பிரிவு கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தமளிப்பதாகும். அவர் நடித்த மூன்றாம் பிறை, இங்கிலீஷ் விங்கிலீஷ் உள்ளிட்ட திரைப்படங்கள் மற்ற நடிகர்களுக்கு ஊக்கமாக அமையும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.