டெல்லி: கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக பிரதமர் மோடி நாளை காலை 9 மணிக்கு புதிய அறிவிப்பு அடங்கிய வீடியோவை வெளியிடுகிறார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், நாளை காலை 9 மணிக்கு சிறிய வீடியோ செய்தியை எனது இந்திய மக்களுக்காக வெளியிடவுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மாதம் 24ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு நாளை தான் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அடுத்த முக்கிய தகவலை வெளியிடுகிறார்.

முன்னதாக, இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் உள்ளிட்டோர் கூட்டத்தில் உடனிருந்தார்.