டெல்லி

ன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு 93 ஆயுதப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் வழங்க உள்ளார்.

இன்று டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை (கடமை பாதை) பகுதியில் இன்று நடைபெற உள்ள நாட்டின் 76-வது குடியரசு தின கொண்டாட்டங்கள் நிகழ்ச்சியில் ராணுவ அணிவகுப்புகளும் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறுகின்றன.. அப்போது விமானங்களின் வான் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இதனால், பல்வேறு பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகன சோதனையும் பல்வேறு இடங்களிலும் சி.சி.டி.வி. கேமிராக்கள் கொண்டு கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் ஆயுத படைகள் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படை வீரர்கள் 93 பேருக்கு வீரதீர விருதுகள் வழங்குவதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதில் வீரர்கள் மறைந்த பின்னர் வழங்கப்படும் 11 விருதுகளும் அடங்கும்.

அதாவது 2 கீர்த்தி சக்ரா விருதுகளும் (ஒரு வீரருக்கு மறைவுக்கு பின்), 14 சவுரியா சக்ரா விருதுகளும் (3 வீரர்களுக்கு மறைவுக்கு பின்), பார் சேனா பதக்கம் (வீரதீர செயல்), 66 சேனா பதக்கங்கள் (7 வீரர்களுக்கு மறைவுக்கு பின்), 2 நவோ சேனா பதக்கம் (வீரதீர செயல்) மற்றும் 8 வாயு சேனா பதக்கங்களும் (வீரதீர செயல்) அடங்கும் என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு தெரிவிக்கின்றது