டெல்லி: தேசிய சட்ட சேவை ஆணையத்தின் தலைவராக  உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி சந்திரசூட்-ஐ  நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.

உச்சநிதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவரான  நீதிபதி சந்திரசூட்டை தேசிய சட்ட சேவை ஆணையத்தின் (NALSA) தலைவராக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்துள்ளார். இதற்கான அறிவிப்பு  மத்திய சட்டம் மற்றும் நீதித்துறையின் அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் இருந்து வந்தார். அவர் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றதும்,   மரபுப்படி சுப்ரீம் கோர்ட்டின் இரண்டாவது மூத்த நீதிபதி, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக நியமிக்கப்படுகிறார்.  அதன்படி, தற்போது சந்திரசூட் நியமிக்கப்பட்டு உள்ளார்.