டெல்லி: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவரது பிறந்தநாளையொட்டி,  டெல்லியில் உள்ள  படேல் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சர்தார் வல்லபாய் படேலின் 148வது பிறந்த தினமான இன்று (அக்.,31) தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் அயராத உழைப்பும், இந்தியாவை இணைக்க மேற்கொண்ட இடைவிடாத முயற்சியும், அவருக்கு இந்தியாவின் இரும்பு மனிதர் என்கிற நற்பெயரை பெற்று தந்தது. சர்தார் வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தில், அக்., 31, 1875ல், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார், சர்தார் வல்லபாய் படேல். மத்திய அரசு அவரின் பிறந்த நாளை, ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்தியா சுதந்திரம் அடைந்தபின், சர்தார் வல்லபாய் படேல், துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார் . தனது வாழ்வில் அரை நுாற்றாண்டு காலம் பொது வாழ்வில் ஈடுபட்டு வந்தவர் சர்தார் வல்லபாய் படேல்.

இன்று அவரது பிறந்தநாளையொட்டி, டில்லியில் சர்தார் வல்லபாய் படேலின் உருவப்படத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் , மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா, மத்திய மந்திரி மீனாட்சி லேகி  உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி,  குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து தனது  எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ள  செய்தியில், நாட்டின் தலைவிதியை அவர் வடிவமைத்த அசாதாரண அர்ப்பணிப்பை நாம் நினைவு கூருகிறோம். தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுகிறது. அவருடைய சேவைக்கு என்றென்றும் நாம் கடமைப்பட்டுள்ளோம் என  குறிப்பிட்டுள்ளார்.