டெல்லி
குடியரசு தின விழாவில் பங்கேற்க சத்தீஸ்கர் மாநில பைகா பழங்குடியினரை ஜனாதிபதி அழைத்துள்ளார்.
‘பைகா’ பழங்குடியின மக்கள் சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா பகுதியில் வசித்து வருகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், பைகா பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் பலர் இன்றுவரை அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக சத்தீஸ்கரில் உள்ள பைகா பழங்குடியினத்தை சேர்ந்த 3 குடும்பங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜ்னாதிபடி திரவுபதி முருமுவுடன் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ‘பைகா’ பழங்குடியின குடும்பத்தினர் உணவருந்த உள்ளனர். பிறகு அவர்கள் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி இல்லம் உள்ளிட்ட இடங்களை இவர்கள் பார்வையிடஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.