சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமித்து குடியரசு தலைவர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவர் 22ந்தேதி பொறுப்பேற்கிறார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வா்நாத் பண்டாரி செப்டம்பர் 12ஆம் தேதி ஓய்வுபெற்ற நிலையில்,  பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி துரைசாமி கடந்த 13ந்தேதி பதவியேற்றார். அவர் வரும் 21ந்தேதியுடன் ஓய்வுபெற உள்ளதால், மற்றொரு மூத்த நீதிபதி  ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக டி.ராஜா பணிபுரிந்து வரும் நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள துரைசாமி வரும் 21-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதைத்தொடர்ந்து 22ந்தேதி அவர்  உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்கிறார்.