கமதாபாத்

காணாமல் போன விஸ்வ இந்து பரிஷன் தலவர் பிரவின் தொகாடியா சுய நினைவற்ற நிலையில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா  முன்பு ஒரு கூட்டத்தில் ஆட்சேபகரமாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் அவருக்கு பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.      அவரைக் கைது செய்ய போலிசார் சென்ற போது அவர் அங்கு இல்லை என கூறி போலீசார் திரும்பி வந்தனர்    ஆனால் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளார் என ஒரு வதந்தி பரவியது.

அதனால் தொண்டர்கள் காவல்நிலையத்தை முற்றுகை இட்டு கோஷமிட்டனர்.   அதை தொடர்ந்து காவல்துறையினர் மும்முரமாக தேடி வந்தனர்.     நேற்று காலை சுமார் 11 மணிக்கு அவர் ஒரு ஆட்டோவில் சென்றதாக கூறப்பட்டது.    இசட் பிரிவு காவல் அளிக்கப்பட்டுள்ள அவர் எவ்வாறு ஆட்டோவில் செல்ல முடியும் என அவர் தொண்டர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

தற்போது அகமதாபாத்தில் உள்ள சந்திரமணி மருத்துவமனையில் பிரவின் தொகாடியா உள்ளதாக தகவல் வந்துள்ளது.

மருத்துவமனை அதிகாரிகள், ”அகமதாபாத் நகர் கோடார்பூர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் பிரவீன் தொகாடியா மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.    அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்,

அவரை பரிசோதித்ததில் அவருடைய உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால் மயக்கம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.     பிரவின் தொகாடியாவின் உடல்நிலை முழுவதுமாக சீரடைந்த பின் மருத்துவ மனையில் இருந்து அனுப்பபடுவார்”  என தெரிவித்துள்ளனர்.