டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் தற்போது லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் உடல்நிலை கோளாறு காரணமாக  முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்து, தொடர்ந்து வென்டிலேட்டரில் இருப்பதாகவும், முன்னேற்றம் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறி இருந்தனர்.

பிரணாப் முகர்ஜியின் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் சீராக இருப்பதாக, உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் அவ்வப்போது தகவல் வெளியிட்டு வருகிறது. நேற்றைய அறிக்கையில், நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் அதிகரித்திருப்பதால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரணாப் உடல்நிலையில் இன்று லேசான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை கூறி உள்ளது. வென்டிலேட்டரில் இருந்தாலும், பிரணாப் சுவாச அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.