மும்பை:

தாழ்த்தப்பட்ட வர்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கட்சித் தலைவரு மாகிய பிரகாஷ்அம்பேத்கர் தனது  செய்தி தொடர்பாளராக திருநங்கை தீஷா பிங்கி ஷாய்ஹா என்பவரை நியமித்துள்ளார்.  திருநங்கை ஒருவர் செய்தி தொடர்பாளர் பணி ஏற்பது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

சமீபத்தில், காங்கிரஸின் பெண்கள் அமைப்பான  மகிளா காங்கிரஸின் பொதுச்செயலாளராக அப்சரா ரெட்டி என்ற திருநங்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நியமித்து, திருநங்கை களும் சமூக செயற்பாட்டில் அடியெடுத்து வைக்க பிள்ளையார் சுழி போட்ட நிலையில், தற்போது பிரகாஷ் அம்பேத்கர் தனது  செய்தி தொடர்பாளராக  திருநங்கையை நியமித்து உள்ளார்.

தீஷா பிங்கி ஷாய்ஹா என்ற திருநங்கை மும்பையில் சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகிறார். இவரை அம்பேத்கரின் கொள்ளு பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கடந்த 23ந்தேதி நடைபெற்ற  பகுஜன் விகாஸ் அகாதி சார்பாக மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில், அம்பேத்கரின் கொள்ளு பேரன் பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ் – ஈ – இத்ஹதுல் முஸ்லீம் கட்சி தலைவர்  ஓவைசி முன்னிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.