புதுச்சேரி

இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ரூ. 4634 கோடிக்கான இடைக்கால நிதிநிலை தாக்கல் செய்துள்ளார்.’ 

இன்று புதுச்சேரியில் சட்டப்பேரவை கூடி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சட்டப்பேரவை நிகழ்வுகளை தொடங்கினார்.இதில் முதல் நிகழ்வாக, மறைந்த முன்னாள் அமைச்சர் ப.கண்ணனுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பிறகு விஜயகாந்த், விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் மார்க்சிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, சபை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதைத்.தொடர்ந்து அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார் அவர்.ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான 5 மாத அரசு செலவினங்களுக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85 ஆயிரத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு நடத்தி, அனுமதி வழங்கப்பட்டதாகச் சபாநாயகர் அறிவித்தார். முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாததைக் கண்டித்து எதிர்க்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் கூட்டம் காலை 9.45 மணிக்குத் தொடங்கி 10.45 மணிக்கு முடிவடைந்தது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார்.