பிரேசில்:
பிரேசிலில்,கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தோல்வி அடைந்து விட்டதாக கூறி ரியோ-டி-ஜெனிரோ உள்ளிட்ட பல நகரங்களில் பாத்திரங்களை தட்டி சத்தம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று மட்டும் பிரேசிலில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதுவரை அங்கு 5 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த இயலாத அதிபர் ஜெய்ர் போல்சனாரோ என குற்றஞ்சாட்டி அவரை பதவி விலக வலியுறுத்தி வீதிகளில் திரண்ட மக்கள் பாத்திரங்களை தட்டி சப்தம் எழுப்பிய படி போராட்டம் நடத்தினர்.
Patrikai.com official YouTube Channel