புதுடெல்லி:
ர்வதேச யோகா தினத்தை குறிக்கும் விதமாக சிறப்பு அஞ்சல்தலை முத்திரை ஒன்றை இந்திய அஞ்சல் துறை நாளை வெளியிடவுள்ளது.

யோகா பட வடிவமைப்புடன் கூடிய இந்த சிறப்பு அஞ்சல் தலை முத்திரை நாடு முழுவதும் உள்ள 810 தலைமை தபால் அலுவலகங்களில் வெளியிடப்படும்.நாளை பதிவு செய்யப்படும் அனைத்து கடிதங்களிலும் இந்த முத்திரையை தலைமை தபால் அலுவலகங்கள் பதிக்கும். இதில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘சர்வதேச யோகா தினம் 2021’ என்று பொறிக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.