சண்டிகர்: 
தவியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இருப்பேன் என்று நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பின்னர்,  மாநில அமைச்சரவையில் சில புதிய முகங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால்  நவ்ஜோத் சிங் சித்து வருத்தமடைந்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பதவியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இருப்பேன். அனைத்து எதிர்மறை சக்திகளும் என்னைத் தோற்கடிக்க முயன்றாலும், நேர்மறை ஆற்றல் வெல்லும், பஞ்சாபியத்தை (யுனிவர்சல் சகோதரத்துவம்) வெல்லும் & ஒவ்வொரு பஞ்சாபியும் வெல்லும்!! என்று குறிப்பிட்டுள்ளார்.