புதுச்சேரி: புதுச்சேரியில் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அம்மாநிலத்தில் கொரோனா லாக்டவுனுக்கு பின் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் வாரத்திற்கு 6 நாள்கள் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கி உள்ளது.

ஆகையால், மாணவர்களின் நலன் கருதி வாரத்திற்கு 5 நாள்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்றும் சனிக்கிழமை விடுமுறை என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர், புதுச்சேரியில் தற்காலிகமாக பள்ளிகளை மூட வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.