புதுச்சேரி: புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமாவை தொடர்ந்து, தற்போது கூட்டணி பலம் 14 ஆகவும், எதிர்க்கட்சிகள் பலம் 14 ஆகவும் உள்ளது. இரு அணிகளுக்கு சமபலம் உள்ள நிலையில், வரும் 22ம் தேதி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, புதுச்சேரியில் நியமன உறுப்பினர்களுக்கு வாக்கு உரிமை உள்ளதால் பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, நிச்சயம் வாக்களிக்க உள்ளதாக பாஜக எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் காரணமாக புதுச்சேரியில் திடீர் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், தமிழக பாஜக தலைவர் எல் முருகன் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் நடக்கும் அரசியல் குழப்பத்திற்கும், பாஜகவுக்கு சம்பந்தம் இல்லை. அதற்கு அந்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.