புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலனை செய்வது வருவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வரும் 22ம் தேதி முதல் 9,10 மற்றும் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதற்கான உத்தரவை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டு இருந்தார். 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் புதுச்சேரியில் கொரோனா மீண்டும் பரவி வருவதால் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலினை செய்யப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.