புதுச்சேரி:  
புதுச்சேரி மாநிலத்தில், நல்லவாடு, வீராம்பட்டினம்  ஆகிய கிராம மீனவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்ததில் மீனவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து  நடுக்கடலில் இரு கிராம மீனவர்களும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இரு கிராம மீனவர்களையும் சமாதானப்படுத்த முயன்றனர். தொடர்ந்து மீனவர்களும் மோதிக் கொண்டதால், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி, மீனவர்களைக் கலைத்தனர். இதையடுத்து அந்த பகுதியில்  நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.