2024 மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (7-5-2024) நடைபெற உள்ளது.

இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இங்குள்ள மொத்தம் 26 தொகுதியில் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்று தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இது தவிர, மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 9 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், அசாம், மேற்கு வங்கத்தில் தலா 4 தொகுதிகள், கோவா, தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டையூ டாமனில் தலா 2 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாளை நடைபெற உள்ள மூன்றாம் கட்ட தேர்தலில் மொத்தம் 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.