டெல்லி:  சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. அமர்சிங் காலமானதைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.  செப்டெம்பர் 11ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சமாஜ்வாதி எம்.பி.யான அமர் சிங்  உடல்நலக்குறைவால் ஆகஸ்ட் 1ந்தேதி அன்று சிங்கப்பூரில் காலமானார்.  அவரது பதவிக்காலம் ஜூலை 2022 வரை உள்ளது. இந்த தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்து உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி ஆகஸ்டு  25ம் தேதி எனவும், வாக்குப்பதிவுக்கான தேதி செப்டம்பர் 11 எனவும் தேதல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புள்ளது. அதனால், பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

சமீபத்தில்,  சமாஜ்வாதி கட்சித் தலைவர் பெனி பிரசாத் வர்மாவின் மரணத்தால்  காலியான மாநிலங்கள் அவை தொகுதிக்கு நடந்த சமீபத்திய இடைத்தேர்தலில், பாஜக வேட்பாளர் ஜெய் பிரகாஷ் நிஷாத் உத்தரபிரதேசத்தில் இருந்து  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பித் தக்கது.