தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நள்ளிரவில் மீன் வியாபாரி உட்பட இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது அரசியல் கொலையா, முன்விரோதத்தில் நடைபெற்ற கொலையா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக தமிழ்நாட்டில் கொலை, போதை பொருள் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.  குறிப்பாக தென்மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில்,  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  அருகே  மர்ம கும்பல் ஒன்று இருவரை வெட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது அரசியல் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறத.

கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் வெள்ளத்துரை (50). இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன் கடை நடத்தி வந்துள்ளார். வழக்கமாக இரவு கடையை மூடிய பின் கடையிலேயே படுத்து உறங்குவதை வெள்ளத்துரை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.  தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிக்கு ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது.

இநத் நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் வெள்ளத்துரை தனது கடையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கும்பல் ஒன்று,  வெள்ளத்துரையை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனை  அருகே இருந்த சாமி என்பவர் தடுக்க முயற்சி செய்துள்ளார். அவரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டி உள்ளது. இந்த தாக்குதலில் சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவர்களத அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்த நிலையில், கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.   உடனடியாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளத்துரையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.

இந்த இரட்டை கொலை சம்பவங்கள் தொடர்பாக தகவல் அறிந்ததும் கோவில்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய்கள் மற்றும் தடய அறிவியல் துறையினர் உதவியுடன் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு அரசியல் கொலையா அல்லது வியாபாரம் தொடர்பான முன்விரோதம்  கொலையா  அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செயலிழந்தது காவல்துறை: ‘கொலை’ மாவட்டமானது நெல்லை – ஒரே மாதத்தில் 10 பேர் சாவு – மக்கள் பதற்றம்…