சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராகவும்,நடிகையாகவும் இருந்து வந்தவர் சித்ரா.

கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ராவிற்கு ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது அனைவரும் அறிந்ததே ஆனால் இருவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் பதிவு திருமணம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.ஹேம்நாத் பலமுறை படப்பிடிப்புக்கு சென்று பிரச்சனை செய்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

சித்ராவின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் அவரை சித்திரவதை செய்ய ஆரம்பித்த ஹேம்நாத் ஒரு கட்டத்தில் அவரை சீரியலில் நடிக்க கூடாது என்று தடை போட ஆரம்பித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா தனது மாமனாருக்கு போன் செய்து கொடுக்கும் போது தனக்கு ஹேம்நாத் செய்யும் கொடுமைகளை பற்றி கண்ணீர் விட்டு அழுது கூறியுள்ளார் இந்த போன் கால் சித்ராவின் போனில் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதை ஹேம்நாத் டெலிட் செய்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதனால் தான் ஹேம்நாத்தை கைது செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]