டில்லி

வரும் 19 ஆம்தேதி தமிழகம் வர இருந்த பிரதமர் மோடியின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த 2 ஆம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் சர்வதேச விமான நிலைய புதிய கட்டட திறப்பு விழாவில் பங்கேற்றிருந்தார். பாஜக சார்பில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக, வருகிற 19 ஆம் தேதி மீண்டும் தமிழ்நாடு வருவதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அவர் திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையைத் திறந்து வைப்பதாகவும், பின்னர், திருப்பூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

தற்போது பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இஎஸ்ஐ மருத்துவமனையைத் திறந்து வைக்கும் தேதி,  மாற்றப்பட்டுள்ளதால், பிரதமர் மோடியின் தமிழக பயணமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுக்கூட்டமும், மருத்துவமனை திறக்கும் நாளன்று நடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.