டெல்லி: மக்களின் உரிமைகள் பாதுகாப்பதில் நீதித்துறை எப்போதும் தனது கடமையைச் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

குஜராத் உயர்நீதிமன்ற வைரவிழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி வழியே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நீதிமன்றம் இந்திய நீதி அமைப்பு மற்றும் இந்தியாவின் ஜனநாயகம் இரண்டையும் பலப்படுத்தியுள்ளது. அரசியலமைப்பை பாதுகாக்கும் பொறுப்பை நமது நீதித்துறை நிறைவேற்றியுள்ளது.

உலகத் தரம் வாய்ந்த நீதி அமைப்பைக் கட்டியெழுப்ப நீதித்துறை செயல்பட வேண்டும். நம்முடைய நீதித்துறை எப்போதுமே அரசியலமைப்பை மேலும் வலுப்படுத்தவும், நேர்மறையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் விளங்கி வருகிறது.

தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய எந்த சூழ்நிலையிலும் நீதித்துறை தமது கடமையைச் செய்து வருகிறது என்று பேசினார். முன்னதாக உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு அடைவதை குறிக்கும் வகையில் தபால் தலை ஒன்றையும் பிரதமர் மோடி  வெளியிட்டார்.