டெல்லி: உலக நாடுகளை விட கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைவாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மும்பை, கொல்கத்தா, நொய்டாவில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை அவர் இன்று தொடங்கி  வைத்தார். நாள்தோறும் 10 ஆயிரம் மாதிரிகள் இந்த மையங்கள் மூலம் பரிசோதனை செய்ய முடியும்.
காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த பின் பிரதமர் மோடி கூறியதாவது: சரியான சமயத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் மற்ற நாடுகளை விட  இந்தியாவில்  கொரோனா தொற்று குறைவாக உள்ளது.  கொரோனா  உயிரிழப்பு விகிதமும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைவாக உள்ளது.
கொரோனாவை இந்தியர்கள் தைரியத்துடன் எதிர்த்து போராடி வருகின்றனர். நாட்டில் இந்த சிகிச்சைக்காக 11 லட்சத்திற்கும்  மேல் படுக்கைகள் உள்ளன. நாட்டில் 1,300  கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 5 லட்சம் பரிசோதனைகளுக்கும் மேல் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.