டில்லி

ரும் 24 ஆம் தேதி பிரதமர் மோடி பெங்களூரு ஐதராபாத் இடையே வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். 

தற்போது கர்நாடகாவில் சென்னை-மைசூரு, பெங்களூரு-தார்வார் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது.  வரும் 24 ஆம் தேதி 3-வது ரயிலாகப் பெங்களூரு-ஐதராபாத் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படுகிறது. இந்த ரயில் சேவையைப் பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.

இந்த ரயில் பெங்களூரு யஷ்வந்தபுரம்-ஐதராபாத் கச்சிகுடா இடையே இயக்கப்பட உள்ளது. நேற்று இந்த வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.  610 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் 7 மணி நேரத்தில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களை விட இது 2 மணி நேரம் முன்னதாக ஐதராபாத்திற்கு சென்றடைகிறது.

வரும் 24-ந் தேதி ரெயில் சேவை தொடங்கப்பட்டாலும், பயணிகளுக்கான சேவை 25-ந் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருமார்க்கமாகவும் தர்மாவாம், தோனே, கர்னூல், கத்வால் சந்திப்பு, மெகபூப்நகர், சாத்நகர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் தினமும் மதியம் 2.45 மணிக்கு யஷ்வந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு ஐதராபாத்தைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.