டெல்லி: கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.