டெல்லி: பிரதமர் மோடி நாடகமாடி கவனத்தை திசை திருப்பி  ‘நாட்டின் எதிர்காலத்துடன் மோடி விளையாடுகிறார்’  என‘ ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி நேற்று  ‘டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்காட்சியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலிக்காட்சி வழியாக கலந்துரையாடினார். “இந்தியாவின் திறன்கள், கலை, கலாசாரம், சமூகத்தை உலகம் புரிந்து கொள்ள விரும்புகிறது. நாட்டின் திறன்கள், யோசனைகளின் உண்மையான பிம்பத்தை உலகுக்கு முன்வைக்கும் பொறுப்பை இளைய தலைமுறையினர், தொடக்க நிறுவனங்கள் மனதில் கொள்ள வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து பிற்பகல் காஷ்மீர் மாநில வளர்ச்சி மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித்தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்து டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில்,

“குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறையினர் வேலை இல்லாத நிலையை சந்தித்து வருகின்றனர்.

பிரதமர், இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி கவனத்தை திசை திருப்புகிறார்.

அவர் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்.

என தெரிவித்து உள்ளார்.