தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவுபெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பனி 10 ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர் தவிர, 23 ஆயிரத்து 747 தனித்தேர்வர்களும் பரிட்சை எழுத விண்ணப்பித்திருந்தனர்.

கடந்த மாதம் 13 ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வின் கடைசி நாளான இன்று வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாட பரிட்சைக்கு 50 ஆயிரம் பேர் வரவில்லை என்ற தகவல் வெளியாகி அரசியலான நிலையில் மாணவர்கள் இடைநிற்றல் குறித்த தரவுகள் வெளியானது.

இந்த நிலையில் இன்று தேர்வுகள் முடிவடைவதை அடுத்து ஏப்ரல் 10 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து மே மாதம் 5 ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.