சென்னை: சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளதால், ஐபிஎல் தொடரின்போது, ஹர்பஜன்சிங் மற்றும் இம்ரான் தாகிர் ஆகியோரிடமிருந்து பந்துவீச்சு தொடர்பாக நிறைய ஆலோசனைகளைப் பெறுவேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பியூஷ் சாவ்லா.

இந்த சீசனின் சென்னை அணிக்காக 6.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள 31 வயதான பியூஷ் சாவ்லா கூறியுள்ளதாவது, “தோனி உலகின் தலைசிறந்த வீரர். எனவே, அவரின் தலைமையின்கீழ் விளையாடுவது ஒரு தனி அனுபவம். பந்துவீச்சாளர்கள் அனைவருக்கும் அவரைப் பிடிக்கும்.

யாரை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று தோனிக்கு நன்றாக தெரியும். சென்னை அணியில், ஹர்பஜன்சிங் மற்றும் இம்ரான் தாகிர் உள்ளிட்ட தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி.

சென்னை அணிக்காக நான் தேர்வுசெய்யப்பட்டபோது பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன். தொடரின்போது, அவர்களிடமிருந்து நிறைய ஆலோசனைகளைப் பெற்று செயல்திறனை மேம்படுத்துவேன்” என்றுள்ளார்.