திருவனந்தபுரம்:

கேரள அரசுக்கு தகவல் தராமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர் களுக்கான ரயில்களை அனுப்புவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கை பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மும்பையில் இருந்து இயக்கப்பட்ட ரயில் கேரளாவின் கன்னூரில் நிற்கும் என அரசுக்கு ரயில்வே தெரிவிக்காததைச் சுட்டிக்காட்டியுள்ள பினராயி விஜயன், இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் முறையிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்படுபவர்கள் இனி அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ள அவர், வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் லட்சக்கணக்கானோருக்கு செலவு செய்ய இயலவில்லை என தெரிவித்துள்ளார்.