திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி 2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லா சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர். பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். எனவே இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு உடனடியாக வெளியிடவில்லை என்பதா இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை.

தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கேரள முதல்வர் பிணராயி விஜயன்.

”இந்த குடியுரிமை திருத்தச்சட்டம் மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் சட்டம் ஆகும் எனவே. சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என்று உறுதியாகக் கூறுகிறோம். கேரளா இந்த வகுப்புவாதத்தைப் பிளவுபடுத்தும் சட்டத்தை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு நிற்கும்” 

என்று அறிவித்துள்ளார்.