கர்நாடகா:
மோடி கூட்டத்திற்கு அழைத்து வந்தவர்களுக்கு கூலி கொடுக்காமல் ஏமாற்றும் பாஜகவினரா ஊழலை ஒழிக்க போகின்றனர்? என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி-யுமான பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி-யுமான பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கர்நாடகத்தில் பிரதமர் பேசிய கூட்டத்திற்கு ரூ.500 கூலி பேசி மக்களை அழைத்துவந்த பாஜக பிரமுகர் கூட்டம் முடிந்தவுடன் ரூ.200 மட்டுமே கொடுக்க கொதித்துப்போன மக்கள் சாலை மறியல்செய்ய போலீசார் தலையிட்டு மக்களை சமாதானம் செய்துள்ளனர்.
அக்கூட்டத்தில் “ஊழலை ஒழிப்பேன்”என்கிறார் மோடி. தலையெழுத்து! என்று குறிப்பிட்டுள்ளார்.