திருவனந்தபுரம்: பெண் ஆசிரியர்களுக்கான டிரெஸ் கோடு குறித்த விமர்சனம் எழுந்த நிலையில், பெண் ஆசிரியர்கள் என்ன டிரெஸ் அணியணும் என்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்றும், சுடிதாரோ, சேலையோ எதுவேனாலும் அணியலாம் என்று கேரள அரசு தெரிவித்து உள்ளது.

ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய, வசதியான ஆடைகளை அணியலாம் என மீண்டும் அறிவித்துள்ள கேரள அரசு, அது தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக கடந்த  2014 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி விரிவான அரசாணையும் பிறப்பித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் கூடுலாத  அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள் சேலை அணிந்து வர வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்த நிலையில்,  கேரள உயர் கல்வித்துறை சார்பில் புதிய உத்தரவு பிறக்கப்பட்டது. அதில்,  பெண் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆடை அணிவதில் கட்டுப்பாடில்லை என்று  தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக  கேரள அரசு பலமுறை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டதாகவும், ஆசிரியைகள் ஆடைகளைத் தேர்ந்தெடுத்து, தங்கள் உடல் வசதிக்கு ஏற்பவும், கல்வி நிறுவனத்துக்கு ஏற்பவும் அணிய உரிமை உண்டு என்று கூறப்பட்டிருந்தது.

மேலும,  ஆசிரியைகள் சேலை அணிந்து வர வேண்டும் என்பது கேரளாவில் ஒருபோதும் கட்டாயமில்லை. கல்வி நிலையங்களில் ஆசிரியருக்கு ஏராளமான பொறுப்புகள் உண்டு. அதை மட்டும் கவனித்தால் கல்வித்தரம் உயரும். அதனால் மாணவர்களுக்கு நன்மை உண்டாகும்.

அதைவிடுத்து இதுபோன்ற கால, சூழலுக்கு உதவாத, மாற்றத்தை ஏற்காத சிந்தனைகளை ஏற்க வேண்டிய அவசியம் கிடையாது. ஒருவர் ஆடை தேர்வு என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம், முடிவு. இதில் அவரின் ஆடை விஷயத்தை விமர்சிக்கவோ, தலையிட்டுக் கருத்து கூறவோ யாருக்கும் உரிமையில்லை.

கேரளா போன்ற முற்போக்குச் சிந்தனை கொண்ட மாநிலத்தில் ஆசிரியைகள் சேலை அணிந்து வரவேண்டும் என்ற கட்டாயப்படுத்தக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.