சென்னை:
முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசின் சார்பில், தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளினை முன்னிட்டு இன்று காலை அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அருகில் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அன்னாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் சார்பில் தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.