புதுடெல்லி:
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்தியாவில் 497 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் என மொத்தம் 3,570 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்வழியில் 31 ஆயிரத்து 965 பேர் நீட் தேர்வை எதிர்கொண்டனர். இதில் 56 புள்ளி 28 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தி்ல் தேர்வு எழுதிய 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 மாணவர்களுள், 67 ஆயிரத்து 787 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் திரிதேவ் விநாயகா தேசிய அளவில் 30-வது ரேங்கையும், எம். ஹரிிணி 43-வது ரேங்கையும் பெற்றுள்ளனர்.

தேசிய அளவில்தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பிரதாப் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளார்.