Skip to content
  • Sun. Jul 12th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

கொரோனாவுக்கு மருந்து ரெடி… மார்தட்டும் பதஞ்சலி நிறுவனம்…

Jun 14, 2020

டெல்லி:

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகின் 600 முன்னணி நிறுவனங்கள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால், மருத்து கண்டுபிடிக்க மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து வருகிறது.

இதற்கிடையில் கொரோனாவுக்கு மருத்து கண்டுபிடிக்கும் பணியில் சில இந்தியா நிறுவனங்களும் களமிறங்க உள்ளன. அவற்றில் பதஞ்சலியும் ஒன்று.  இந்த நிறுவனம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில்,  “நாட்டை உலுக்கி வரும கொடிய நோயான கொரோனா தொற்றுக்குச் சிகிச்சைக்கான மருந்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் பதஞ்சலி தீவிரமாக இறங்கி இருப்பதாகவும்,  இந்திய மருத்துவ சோதனை ஒருங்கிணைப் பாளர் அலுவலகத்தில் பதிவு செய்து  ஜெய்ப்பூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு துறையின் மூலம் சோதனைகள் செய்து வருகின்றன என்று பதஞ்சலி ஆயுர்வேத ஆராய்ச்சி கழகத் தலைவர் பட்டாசாரியா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்து உள்ளது. தங்களது மருந்துளை கொரோனா பாதிக்கப்பட்ட  நோயாளிகள் ஐந்து நாட்கள் முதல் 14 நாட்கள் வரை சீராக உட்கொண்டால் அவர்கள் குணமடைவார்கள் என்றும்,  பல நோயாளிகள் இதனை உட்கொண்டு குணம் அடைந்து இருப்பதாகவும் அந்நிறுவன தலைவர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா தெரிவித்து உள்ளார்.

பதஞ்சலி நிறுவனம் கூறுவது உண்மையா, பொய்யா என்பது குறித்து இதுவரை இந்தியா சுகாதாரத்துறை எந்தவொரு விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post navigation

டீன் ஜெயந்தியின் விடுமுறை சந்தேகத்தை எழுப்புகிறது…. கனிமொழி எம்.பி.
கொரோனாவிலிருந்து தப்பிக்க வேண்டுமா? ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் கூறுவதை கேளுங்கள்…

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer