டில்லி

ர் இந்தியா அதிகாரி ஒருவரை நடுவானில் பயணி ஒருவர் அறைந்துள்ளது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏர் இந்தியா மூத்த அதிகாரி ஒருவரை சிட்னி – டில்லி விமானத்தில் ஒரு பயணி கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த விமானத்தில் இருக்கையை மாற்றிக்கொள்வதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பயணி ஒருவர், விமானத்தில் பயணம் செய்த ஏர் இந்தியா அதிகாரியைக் கண்ணத்தில் அறைந்துள்ளார்.

டில்லியில் விமானம் தரையிறங்கிய பிறகுத் தாக்குதல் நடத்திய பயணி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏர் இந்தியா அதிகாரியைப் பயணி ஒருவர் நடுவானில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா,

“ஜூலை 9, 2023 அன்று சிட்னி-டில்லியில் இயக்கப்படும் ஏ1-301 விமானத்தில் பயணி ஒருவர், வாக்குவாதம் மற்றும் எழுத்துப்பூர்வ எச்சரிக்கைகளை மீறி நடந்து கொண்டார், இது மற்ற பயணிகளுக்கு துன்பத்தை ஏற்படுத்தியது.

இதில் எங்கள் ஊழியர்களில் ஒருவரும் அடங்கும். விமானம் டில்லியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதும், பயணி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார், பின்னர் பயணி எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார்”

என்று தெரிவித்துள்ளது.