பனாஜி: கோவா முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவா முன்னாள் முதலமைச்சரும்,பாஜக மூத்த தலைவராக இருந்தவர் மனோகர் பாரிக்கர். உடல்நிலை கோளாறால் அவர் மறைந்துவிட்டார். அவரது மகன் உத்பால் பாரிக்கர்.  பாஜகவில் உள்ளார்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தியை அவரே ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது லேசான தொற்றுதான். ஆகையால் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொள்வேன் என்றார். ஆனாலும் மருத்துவர்கள் அறிவுரையின்படி, முறையான சிகிக்சை பெற அவர் மருத்துவமனையில் சேர்ந்து உள்ளார்.