டில்லி

ற்போது நடந்து வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரையுடன் துவங்கியது. கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பாஜக ஆட்சிக்கு வந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பும், அதற்குப் பின்னரும் இந்தியப் பொருளாதாரத்தின் நிலையை ஒப்பிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ‘வெள்ளை அறிக்கை’ தாக்கல் செய்வார் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத ஜோஷி நேற்று தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு, வரும் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.