பஞ்சாப்:
முன்னாள் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் காலமானார். அவருக்கு வயது 95.

பஞ்சாபில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். கடந்த 50 ஆண்டுகளாக பஞ்சாப் மாநில அரசியலில் கிங்காகவும் கிங்மேக்கராகவும் இருந்தவர்.
சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவரான பாதலுக்கு இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமா காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரகாஷ் சிங் பாதல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில், பிரகாஷ் சிங் பாதல் இன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.