டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார் இந்தியாவின் பவினா படேல்.

நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற செர்பியாவைச் சேர்ந்த உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையை வெற்றி கொண்டு அரையிறுதிக்கு நுழைந்தார்.

இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் சீனாவைச் சேர்ந்த மியாவ் ஜாங்-கை 7-11 11-7 11-4 9-11 11-8 என்ற செடிகளில் வென்றார்.

ஐந்து செட்டுகள் நடந்த இந்த போட்டியில் உலகின் மூன்றாம் நிலையில் இருக்கும் சீன வீராங்கனையை போராடி வென்றார்,

மியாவ் ஜாங் 2016 ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 ம் ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளி வென்ற வீரர்களை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்திருக்கும் பவினாபென் படேல் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.