டோக்கியோ
டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்று வருகின்றனர். இதில் இந்தியாவின் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா பென் படேலும் ஒருவர் ஆவார்.
இவர் டேபிள் டென்னிஸ் போட்டியின் காலிறுதி போட்டி, மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அவர் அரையிறுதியில் சீனா வீராங்கனை ஜாங் மியாவை 3:2 என்னும் செட் கணக்கில் வீழ்த்தினார். அப்போதே இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் உறுதி ஆனது.
இறுதிச் சுற்றில் அவர் உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங் உடன் மோதினார். இந்த போட்டியில் சீன வீராங்கனை இந்தியாவின் பவினா பென் படேலை 3:0 என்னும் செட் கணக்கில் தோற்கடித்தர்.
இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப் பதக்கம் பெற்று இந்த போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.